காலத்தால் அழியாத எண்ணற்ற இசைப் பாடல்களை தமிழுலகுக்குக் கொடுத்த எம்.எஸ். விஸ்வநாதன், அந்த காலத்திலேயே இசையில் பல சாதனைகளைப் படைத்தவர்.
அதில் குறிப்பாக சிவாஜி - சரோஜா தேவி நடத்த புதிய பறவை படத்தில் எங்கே நிம்மதி... எங்கே நிம்மதி என்ற பாடலுக்காக சுமார் 300க்கும் மேற்பட்ட வயலின்களை பயன்படுத்தி புதிய சாதனையைப் படைத்தார்.
புதிய பறவையில், 300க்கும் மேற்பட்ட வயலின்களைப் பயன்படுத்தி இசையமைத்த எம்.எஸ்.வி. தனது திறமையை வெளிப்படுத்தும் விதமாக பாகப்பிரிவினை என்ற படத்தில் தாழையாம் பூ முடித்து என்ற பாடலில் வெறும் மூன்றே மூன்று இசைக் கருவிகளை மட்டுமே பயன்படுத்தி இசையமைத்து ஹிட் கொடுத்தவர்.
திறமையான இசைக் கலைஞனால் எதுவும் முடியும் என்று உலகுக்கு நிரூபித்தவர் எம்.எஸ். வி. அவருக்கு நாமும் நினைவஞ்சலி செலுத்துவோம்.