தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பதான்கோட்டில் துப்பாக்கி முனையில் கார் கடத்தல்: பதற்றம்; தீவிர வாகன சோதனை

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் காரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

Updated On :23 மார்ச் 2016, 5:33 am

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் காரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

நேற்று இரவு சுஜான்புர் நகர்ப் பகுதியில் கார் ஓட்டுநர் துப்பாக்கி முனையில் கீழே இறக்கிவிடப்பட்டு கார் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து, பதான்கோட் மாவட்டம் முழுவதும் தீவிர பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. காரை கடத்தியவர்கள் பயங்கரவாதிகளா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

சாலையோரம் நின்றிருந்த மூன்று பேர் காரை வழிமறித்துள்ளனர். போர்ட் பிகோ காரை ஓட்டி வந்த நபர், காரை நிறுத்தியது ஏன் என்று கேட்ட போது, அவரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய நபர்கள், அவரிடம் இருந்து காரை பறித்துக் கொண்டுள்ளனர்.

இரண்டு பேர் காரை ஓட்டிச் சென்ற நிலையில், ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டாதாக பஞ்சாப் காவல்துறை தெரிவித்துள்ளது.

பதான்கோட் - ஜம்மு நெடுஞ்சாலையில் இருந்து 6 கி.மீ. தொலைவில் சுஜான்புர் அமைந்துள்ளது.

இதே போன்றுதான், கடந்த ஜனவரி 2ம் தேதி காரை கடத்திச் சென்ற பயங்கரவாதிகள் விமானப்படைத் தளத்தில் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.