திருச்சி: போலியான ஆவங்களை சமர்ப்பித்து பயணப்படி சலுகை பெற்ற குற்றச்சாட்டின் பெயரில், திருச்சி ரயில்வே கோட்டத்தில் 13 டிக்கெட் பரிசோதகர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தெற்கு ரயில்வே முதன்மை வணிக மேலாளர் சக்சேனா தெரிவித்துள்ளதாவது:
போலியான ஆவங்களை சமர்ப்பித்து பயணப்படி சலுகை பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் பெயரில், திருச்சி ரயில்வே கோட்டத்தில் 13 டிக்கெட் பரிசோதகர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் திருச்சி கோட்ட எஸ்.ஆர்.எம்.யூ துணைப்பொதுச்செயலாளர் வீரசேகரனும் அடங்குவார்.
இவ்வாறு சக்சேனா தெரிவித்துள்ளார்.