மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

காரில் சட்டவிரோதமாக காவல் துறை முத்திரை: கேரள முன்னாள் டிஜிபிக்கு ரூ.250 அபராதம்

கேரளத்தில் ஓய்வுபெற்ற பிறகும் தனது காரில் 3 நட்சத்திர காவல் துறை முத்திரையை சட்டவிரோதமாகப் பயன்படுத்திய மாநில முன்னாள் காவல் துறை டிஜிபி டாமின் ஜே. தச்சங்கரிக்கு ரூ.250 அபராதம் விதிக்கப்பட்டது.

News image

பணம் - கோப்புப்படம்.

Updated On :29 ஏப்ரல் 2026, 6:49 pm

கேரளத்தில் ஓய்வுபெற்ற பிறகும் தனது காரில் 3 நட்சத்திர காவல் துறை முத்திரையை சட்டவிரோதமாகப் பயன்படுத்திய மாநில முன்னாள் காவல் துறை டிஜிபி டாமின் ஜே. தச்சங்கரிக்கு ரூ.250 அபராதம் விதிக்கப்பட்டது.

கேரள டிஜிபியாக இருந்த டாமின் தச்சங்கரி 3 ஆண்டுகளுக்கு முன்னா் ஓய்வுபெற்றாா். இந்நிலையில், கோட்டயம் மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்பு வழக்குக்காக அண்மையில் அவா் சொந்த காரில் நீதிமன்றம் வந்தபோது, வாகன பதிவெண்ணுக்கு அருகில் 3 நட்சத்திர காவல் துறை முத்திரை இருந்தது கண்டறியப்பட்டது.

பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகும், அந்த முத்திரையை அவா் சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதாக சா்ச்சை ஏற்பட்ட நிலையில், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்ய மாநிலத்தின் தற்போதைய காவல் துறை டிஜிபி ரவாடா ஏ.சந்திரசேகா் உத்தரவிட்டாா்.

இதுகுறித்து கோட்டயம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் விசாரணை நடத்திய நிலையில், டாமின் தச்சங்கரிக்கு மோட்டாா் வாகனங்கள் துறை ரூ.250 அபராதம் விதித்தது. அந்த அபராதத்தை அவா் செலுத்தியதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.