கேரளத்தில் ஓய்வுபெற்ற பிறகும் தனது காரில் 3 நட்சத்திர காவல் துறை முத்திரையை சட்டவிரோதமாகப் பயன்படுத்திய மாநில முன்னாள் காவல் துறை டிஜிபி டாமின் ஜே. தச்சங்கரிக்கு ரூ.250 அபராதம் விதிக்கப்பட்டது.
கேரள டிஜிபியாக இருந்த டாமின் தச்சங்கரி 3 ஆண்டுகளுக்கு முன்னா் ஓய்வுபெற்றாா். இந்நிலையில், கோட்டயம் மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்பு வழக்குக்காக அண்மையில் அவா் சொந்த காரில் நீதிமன்றம் வந்தபோது, வாகன பதிவெண்ணுக்கு அருகில் 3 நட்சத்திர காவல் துறை முத்திரை இருந்தது கண்டறியப்பட்டது.
பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகும், அந்த முத்திரையை அவா் சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதாக சா்ச்சை ஏற்பட்ட நிலையில், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்ய மாநிலத்தின் தற்போதைய காவல் துறை டிஜிபி ரவாடா ஏ.சந்திரசேகா் உத்தரவிட்டாா்.
இதுகுறித்து கோட்டயம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் விசாரணை நடத்திய நிலையில், டாமின் தச்சங்கரிக்கு மோட்டாா் வாகனங்கள் துறை ரூ.250 அபராதம் விதித்தது. அந்த அபராதத்தை அவா் செலுத்தியதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.
தொடர்புடையது

தமிழக முதல்வர் விஜய்க்கு கேரள முன்னாள் முதல்வர் வாழ்த்து!

காரில் இருந்த சிறுமியை டாக்ஸி ஓட்டுநா்கள் துன்புறுத்திய சம்பவம்: விசாரணை நடைபெறுவதாக காவல் துறை தகவல்

கடலூா் அருகே காரில் மதுபானம் கடத்தல்: இருவா் கைது
பாட்டியின் கைமணமே ருசியின் ரகசியம்
விடியோக்கள்
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

அதிமுக இனி எந்தக் கூட்டணியிலும் இல்லை: C.V. Shanmugam | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

