சசிகலா புஷ்பாவின் ஆதரவாளர்களது ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவின் வீட்டில் வேலை பார்த்து வந்த சகோதரிகளான பானுமதி, ஜான்சிராணி ஆகிய இருவரும், சசிகலா புஷ்பா குடும்பத்தினர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். இந்த வழக்கில், பணிப் பெண்களுக்கு ஆதரவாக வாதாடி வந்த திசையன்விளையைச் சேர்ந்த வழக்குரைஞர் சுகந்தி ஜெய்சன் வீட்டின் மீது சிலர் தாக்குதல் நடத்தினர்.
இதுதொடர்பாக, திசையன்விளை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சசிகலா புஷ்பாவின் ஆதரவாளர்களான நாடார் மக்கள் சக்தி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார், ராமலிங்கம், சத்ய சித்திரைக்குமார் உள்ளிட்டோரை கைது செய்தனர்.
இந்த வழக்கில், சசிகலா புஷ்பா, ஹரி நாடார், ராமலிங்கம் மற்றும் சத்ய சித்திரைக்குமார் உள்ளிட்டோரது ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் மீண்டும் ஜாமீன் வழங்கக் கோரி ராமலிங்கம் மற்றும் சத்ய சித்திரைக்குமார் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாமீன் வழங்கினால் அவர்கள் வெளியே சென்று சாட்சிகளைக் கலைக்க வாய்ப்புள்ளதாக போலீஸார் தெரிவித்திருப்பதை புறக்கணிக்க முடியாது என்று கூறி, இருவரது ஜாமீன் மனுக்களையும் நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் ரூ.100 கோடி வசூலித்த வாழ - 2..! புதிய சாதனை!
நாட்டின் அரசியல் வரைபடத்தையே மாற்றும் முயற்சி! ராகுல் காந்தி

மிஸ்பண்ணிடாதீங்க... இந்தியன் வங்கியில் 350 சிறப்பு அலுவலர் பணி!

காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்குப் பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

