/

தமிழக விவசாயிகள்  போராட்டத்திற்கு அதிமுக அம்மா அணி ஆதரவு ! 

தில்லியில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளின் போராட்டதிற்கு ...

News image
Updated On :3 ஏப்ரல் 2017, 6:20 am

DIN

சென்னை: தில்லியில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளின் போராட்டதிற்கு ஆதரவளிப்பதாக அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.   

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை விபரம் வருமாறு:

தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் அமைதியான முறையில் நடைபெற்று வரும் தமிழக விவசாயிகளின் போராட்டதிற்கு அதிமுக அம்மா அணி ஆதரவளிக்கிறது. அவர்கள் அமைதியாக காந்திய வழியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மத்திய அரசோ அவர்களைப் பற்றி கண்டுகொள்ளாமல் அமைதியாக இருக்கிறது.

இவ்வாறு அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.