மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சாலைகளில் ஏற்படும் பள்ளம் இயற்கையானது அல்ல: நிபுணர்கள் குற்றச்சாட்டு

சென்னையில் அவ்வப்போது சாலைகளில் பள்ளம் ஏற்படுவதற்கு அலட்சியமும், முக்கிய விதிமுறைகளை பின்பற்றாமல் விட்டுவிடுவதுமே காரணம் என்று புவி ஆராய்ச்சியாளர்களும், சுரங்கப் பணி நிபுணர்களும் கூறுகிறார்.

News image
Updated On :10 ஏப்ரல் 2017, 6:59 am

DIN


சென்னை: சென்னையில் அவ்வப்போது சாலைகளில் பள்ளம் ஏற்படுவதற்கு அலட்சியமும், முக்கிய விதிமுறைகளை பின்பற்றாமல் விட்டுவிடுவதுமே காரணம் என்று புவி ஆராய்ச்சியாளர்களும், சுரங்கப் பணி நிபுணர்களும் கூறுகிறார்.

சர்வதேச புவியறிவியல் மேம்பாட்டு கழகத்தைச் சேர்ந்த புவியறிவியலாளர் எல். இளங்கோ, சென்னையின் புவியமைப்பில் ஏற்பட்ட இயற்கை மாற்றங்களே இதுபோன்ற பள்ளங்கள் ஏற்படக் காரணம் என்று கூறப்படுவதை முற்றிலும் மறுத்துள்ளார்.

அண்ணா சாலையில் பள்ளம் ஏற்பட்டதற்கு சுமார் 3 அடி ஆழத்தில் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. சுரங்கத்தின் மேற்புறச் சுவர்களுக்கு மேலே இருக்கும் மணற்பரப்பை எவ்வாறு வைக்க வேண்டும் என்பதற்கான கொள்கைகள் முழுவதுமாக பின்பற்றாததே இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கக் காரணமாக உள்ளது என்று கூறியுள்ளார்.

Story image

ஞாயிற்றுக்கிழமை அண்ணாசாலையில் ஏற்பட்ட பள்ளம், கடந்த 2 வாரத்தில் நடந்த இரண்டாவது சம்பவம். இதே போல மேலும் சில பள்ளங்களும் ஏற்பட்டுள்ளது.

மிகப்பெரிய கட்டுமானப் பணிகள் நடைபெறும் பெருநகரங்களில் இதுபோன்று பள்ளம் ஏற்படுவது சாதாரண விஷயம்தான் என்றாலும், சென்னையில் இது அடிக்கடி நிகழ்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. கட்டுமானப் பணிகள் நடக்கும் பகுதிகள் பொதுமக்கள் பயன்படுத்துவதில் இருந்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டு,  அது முழுக்க பாதுகாப்பான்து என்பதை உறுதி செய்த பிறகு திறந்துவிட வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

மேலும், இனியாவது, சுரங்கம் அமைக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்து, இதுபோன்ற பள்ளங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கும் இடங்களை கண்டறிந்து, அவ்விடங்களில் சிமெண்ட் கலவையைக் கொட்டி நிரப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை மதியம் அண்ணாசாலையில் ஏற்பட்ட மிகப்பெரிய பள்ளம், மெட்ரோ சுரங்கப் பாதை ஊழியர்களால் மூடப்பட்டு, இன்று போக்குவரத்துக்கு திறந்துவிடப்பட்டது. முதற்கட்டமாக இலகு ரக வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.