பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மாருதா புயல் கரையை கடந்தது: புதுச்சேரி துறைமுகத்தில் புயல் கூண்டு இறக்கம்

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரி, நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை

News image
Updated On :17 ஏப்ரல் 2017, 3:46 am

DIN

புதுச்சேரி: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரி, நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்பட்டது.

அந்தமான் அருகே வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, நாகை, காரைக்கால் துறைமுகங்களில் தூர முன்னறிவிப்பாக 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு சனிக்கிழமை ஏற்றப்பட்டது.

இந்நிலையில், இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, மேலும் வலுப்பெற்று, புயலாக உருவாகியுள்ளது.

"மாருதா' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் மியான்மர் நோக்கி நகர்வதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

வங்கக் கடல் பகுதியில் புயல் உருவாகியுள்ளதைக் குறிக்கும் வகையில் புதுச்சேரி, கடலூர், நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 2-ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

இந்நிலையில், வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த மாருதா புயல் கரையை கடந்ததால் எச்சரிக்கை விலக்கப்பட்டது. இதையடுத்து புதுச்சேரி துறைமுகத்தில் ஏற்றப்பட்டிருந்த 2-ஆம் எண் எச்சரிக்கை புயல் கூண்டு இறக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.