மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

அமைச்சர் விஜயபாஸ்கரிடம் வருமான வரித் துறை அதிகாரிகள் ஒரு மணி நேரம் விசாரணை

அமைச்சர் விஜயபாஸ்கரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை இரவு சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர்.

News image
Updated On :17 ஏப்ரல் 2017, 8:34 pm

DIN

அமைச்சர் விஜயபாஸ்கரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை இரவு சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இது குறித்த விவரம்: ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக எழுந்தப் புகார் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்
துறையினர் சோதனை செய்து ரூ.5 கோடியும், ரூ.89 கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக விஜயபாஸ்கரிடம் ஏற்கனவே வருமான வரித் துறையினர் கடந்த 10-ஆம் தேதி விசாரணை செய்தனர். இந்த நிலையில், இரண்டாவது முறையாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் விஜயபாஸ்கர் திங்கள்கிழமை இரவு 8.30 மணியளவில் விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள், ஆவணங்கள் தொடர்பாக விளக்கங்கள் கேட்டனர்.
சுமார் ஒரு மணி நேர விசாரணைக்கு பின்னர், விஜயபாஸ்கர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். வருமான வரித் துறை அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் திடீரென ஆஜரானதால், பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக வருமான வரித் துறையினர், மேலும் சிலரிடம் விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.