சென்னையில் பெருநகர காவல் துறையில் பணியாற்றும் அனைத்துக் காவலர்களும் புதன்கிழமை காலை 6 மணிக்கு பணியில் இருக்குமாறு காவல் ஆணையர் கரண் சின்கா உத்தரவிட்டுள்ளார்.
தற்போது நிலவும் அசாதாரண அரசியல் சூழ்நிலை நிலவுவதால் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அமைச்சர்கள் வீடு, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம், சட்டப்பேரவை உறுப்பினர் தங்கும் விடுதி உள்ளிட்ட இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார் காவல் ஆணையர் சின்கா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.