அனைத்துக் காவலர்களும் பணிக்கு வர உத்தரவு

சென்னையில் பெருநகர காவல் துறையில் பணியாற்றும் அனைத்துக் காவலர்களும் புதன்கிழமை காலை 6 மணிக்கு பணியில் இருக்குமாறு காவல் ஆணையர் கரண் சின்கா உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் பெருநகர காவல் துறையில் பணியாற்றும் அனைத்துக் காவலர்களும் புதன்கிழமை காலை 6 மணிக்கு பணியில் இருக்குமாறு காவல் ஆணையர் கரண் சின்கா உத்தரவிட்டுள்ளார்.
தற்போது நிலவும் அசாதாரண அரசியல் சூழ்நிலை நிலவுவதால் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அமைச்சர்கள் வீடு, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம், சட்டப்பேரவை உறுப்பினர் தங்கும் விடுதி உள்ளிட்ட இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார் காவல் ஆணையர் சின்கா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com