சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

வருமான வரி சோதனைக்கு யாரும் பயப்படவில்லை: தமிழக நிதி மற்றும் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார்

வருமான வரித் துறை சோதனைக்கு அமைச்சர்கள் யாரும் பயப்படவில்லை என தமிழக நிதி மற்றும் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:20 pm

DIN

வருமான வரித் துறை சோதனைக்கு அமைச்சர்கள் யாரும் பயப்படவில்லை என தமிழக நிதி மற்றும் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் ஏரியில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை அமைச்சர் ஜெயக்குமார் வியாழக்கிழமை பார்வையிட்டார் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தினகரன் சார்ந்த குடும்பத்தை ஒதுக்கி வைக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த தொண்டர்களின் விருப்பம்.
இனி கட்சியிலும் ஆட்சியிலும் தினகரன் குடும்பத்தினர் தலையீடு இருக்காது. ஓ.பி.எஸ்சிடம் ஒரு சில எம்எல்ஏ-க்கள் மட்டுமே உள்ளனர். மாவட்டச் செயலாளர்கள் யாரும் இல்லை. வருமான வரித் துறை சோதனைக்கு அமைச்சர்கள் யாரும் பயப்படவில்லை. தினகரன் சொல்வது போல் அமைச்சர்கள் எதற்கும் பயப்படவில்லை. ஜெயலலிதாவின் ஆட்சி இந்த நான்கு ஆண்டுகள் மட்டுமல்ல. வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை அமைப்போம்.
ஓபிஎஸ் அணியுடன் எப்போது வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளோம். பேச வருவதற்கு அவர்களுக்கு விருப்பம் இல்லை. தொண்டர்களின் மன ஓட்டத்தையே நான் பிரதிபலித்தேன். அதை ஓ.பி.எஸ். தங்களது வெற்றி என்று சொன்னால் என்ன அர்த்தம் என்று கேள்வி எழுப்பினார் ஜெயக்குமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.