ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

நடிகர் கமல்ஹாசன் மே 5ல் வள்ளியூர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

மகாபாரதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறிய நடிகர் கமல்ஹாசன் வள்ளியூர் நீதிமன்றத்தில் வரும் மே 25-ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:21 pm

DIN

மகாபாரதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறிய நடிகர் கமல்ஹாசன் வள்ளியூர் நீதிமன்றத்தில் வரும் மே 25-ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்துக்களை அவமதிக்கும் வகையிலும் மகாபாரதத்தை இழிவுபடுத்தும் வகையிலும் நடிகர் கமல்ஹாசன் பேசியதாகவும் அவர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி, நெல்லை மாவட்டம், வள்ளியூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் சமீப காலமாக கருத்து என்ற போர்வையில், சமூக ஊடகங்களான டுவிட்டர். முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளம் மூலமாக பல அதிரடியான கருத்துகளை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கமல், இந்து மதம் குறித்து கருத்து தெரிவித்தார்.

கமலின் இந்தப் பேச்சு, இந்து மதத்தை இழிவு செய்யும் விதமாக இருப்பதாகக் கூறி இந்து மக்கள் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் ஒன்றும் அளித்தனர். இது திரையுலகினர், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம், அஞ்சுகிராமத்தைச் சேர்ந்தவர், ஆதிநாத சுந்தரம். இவர், பழவூரில் வியாபாரம் செய்து வருகிறார். பழவூர் வியாபாரிகள் நலச்சங்கத் தலைவராகவும்  தர்ம ரக்ஷண ஸ்மிதி அமைப்பின் ராதாபுரம் வட்டார துணைச் செயலாளராகவும் இருந்து வருகிறார். இவர், இந்த விவகாரம் தொடர்பாக வள்ளியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவரது மனுவில், தனியார் தொலைக்காட்சியின் பேட்டியில், பெண்கள் பாதுகாப்பு தொடர்பான கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கையில், இதிகாசமான மகாபாரதத்தில் சூதாடியது தொடர்பாக, அவதூறான கருத்துக்களைத் தெரிவித்தார்.

இந்து மதத்தையும் இந்துக்கள் தெய்வ நூலாக போற்றி வணங்கி வரும் 'மகாபாரதம்' குறித்தும் இழிவான கருத்துகளை தெரிவித்துள்ள நடிகர் கமல் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணைக்கு, நடிகர் கமல்ஹாசன் வள்ளியூர் நீதிமன்றத்தில் வரும் மே 25-ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.