ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

அதிமுக மாவட்ட செயலாளர்கள் அவசர கூட்டம் நாளை நடைபெறுகிறது

சென்னையில் அதிமுக அம்மா அணியின் மாவட்ட செயலாளர்களின் அவசர கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை 25, 26 மற்றும் 27-ஆம் தேதிகள் என முறையே 3 நாட்கள் நடைபெறுகிறது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:22 pm

DIN

சென்னை: சென்னையில் அதிமுக அம்மா அணியின் மாவட்ட செயலாளர்களின் அவசர கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை 25, 26 மற்றும் 27-ஆம் தேதிகள் என முறையே 3 நாட்கள் நடைபெறுகிறது.

இதையடுத்து அனைத்து மாவட்ட செயலாளர்களும் சென்னை அதிமுக தலைமை அலுவலகம் வரவும், அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறும் அதிமுக தலைமை அலுவலகம் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதிமுக அம்மா அணி, அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணிகள் இணைவது குறித்த முக்கிய பேச்சு இன்று துவங்கவுள்ள நிலையில், அவசர, அவசரமாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருப்பது அரசியல் நோக்கர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இரட்டை இலை சின்னம் தொடர்பாகவும், கட்சியின் நிலவி வரும் சூழ்நிலைகள் குறித்தும் விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.