அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தால்தான் இருவருக்கும் வாழ்க்கை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கொடைக்கானலில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மத்திய அரசு தமிழ்நாடை மதிக்கவில்லை, பாஜக தலைவர்கள் திமிராக பேசுகிறார்கள். தமிழகத்தில் பாஜகவை திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது.
வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய ராமகோகன ராவ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தால்தான் இருவருக்கும் வாழ்க்கை என்று கூறினார்.
மேலும் கொடைக்கானலில் உள்ள யூக்ளிப்டஸ் மரங்கள் அகற்றப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.