பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

முட்டை ஊழல்: கமல் ஹாசன் புகார்! 

பெரம்பலூர் அங்கன்வாடி மையத்தில் கமல் ஹாசன் ரசிகர்கள் ஆய்வு நடத்தினார்கள். ஆய்வில் குழந்தைகளுக்குக் கெட்டுப்போன முட்டைகளை வழங்கியது..

News image
Updated On :1 ஆகஸ்ட் 2017, 8:57 am

எழில்

பெரம்பலூரில் சத்துணவில் கெட்டுப்போன முட்டைகளைக் குழந்தைகளுக்கு வழங்கியது குறித்து நடிகர் கமல் ஹாசன் புகார் கூறியுள்ளார்.

தனது நற்பணி மன்றங்களைச் சேர்ந்தவர்கள் தமிழக அரசின் ஊழல்கள் குறித்து அமைச்சர்களுக்கு விவரங்களை அனுப்ப வேண்டும் என்று என கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்தார். இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கமல் குறித்து தமிழக அமைச்சர்களும் பல்வேறு விமர்சனங்களைக் கூறிவருகிறார்கள். 

இந்நிலையில் ஜூலை 24 அன்று பெரம்பலூர் அங்கன்வாடி மையத்தில் கமல் ஹாசன் ரசிகர்கள் ஆய்வு நடத்தினார்கள். ஆய்வில் குழந்தைகளுக்குக் கெட்டுப்போன முட்டைகளை வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.  

கெட்டுப்போன முட்டைகளை வழங்கியதைச் சுட்டிக்காட்டி ட்விட்டரில் கமல் கூறியதாவது:

பெரம்பலூரில் அம்பலமான முட்டை ஊழல், இயக்கத்துக்குப் பெருமையே. எனினும் இயக்க வக்கீல்களின் ஆலோசனைப்படி செயல்படவும். சட்டமீறல் நம் தரப்பில் கூடாது என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.