திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

ராகுல் காந்தி மீதான தாக்குதல் மூலம் காங்கிரசை பணிய வைக்க முடியாது: நமச்சிவாயம் பேச்சு

ராகுல் காந்தி மீது குஜராத் மாநிலத்தில் பாஜகவினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்து புதுச்சேரி மாநில காங்கிரஸ் கமிட்டி சார்பில் சனிக்கிழமை தலைமைதபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:36 pm

தினமணி

ராகுல் காந்தி மீது குஜராத் மாநிலத்தில் பாஜகவினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்து புதுச்சேரி மாநில காங்கிரஸ் கமிட்டி சார்பில் சனிக்கிழமை தலைமை
தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநில தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கி பேசியதாவது:
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ள சேதங்களை தொடர்ந்து பார்வையிட்டு வருகிறார். அதன்படி குஜராத்
மாநிலத்திலும் பாதிக்கப்பட்ட மக்களை சென்று பாரர்வையிட்டு ஆறுதல் கூறச் சென்றார். அப்போது பாஜகவைச் சேர்ந்த கும்பல் அவர் மீது கொலைவெறி
தாக்குதல் நடத்தியுள்ளது. அதில் அவரது கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.

இதைக் கண்டிக்கும் வகையில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மத்திய பாஜக அரசு, குஜராஜ் மாநில பாஜக அரசுகளைக் கண்டிக்கும் வகையில் தான் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பாஜகவினர் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். தில்லியில் கடந்த 100 நாள்களாக விவசாயிகள் கேட்பாரற்ற நிலையில் உள்ளனர். அவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண இந்த அரசுக்கு எண்ணம் இல்லை.

ராகுல் காந்தி மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறச் சென்ற வேளையில் அவர் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். பாஜக அரசு நாடு
முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் கலவர சூழலை உருவாக்கி அதன் மூலம் அரசியல் ஆதாயம் பெற விரும்புகின்றனர். அவர்களது கனவு நிச்சயம் பலிக்காது.

வரும் 2019-ம் நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி பிரதமராவது உறுதி. இதை பொறுக்க முடியாமல் அவர் தாக்குதல் நடத்தி உள்ளனர். காங்கிரஸ் அரசு கடந்த 5 ஆண்டுகள் ஆண்ட நேரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் விவசாய கடன் ரூ.70 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்தது.

ஆனால் புதுவை மாநில அரசு விவசாயக் கடன் ரூ.22 கோடியை தள்ளுபடி செய்ய முடியாமல் ஆளுநர் கிரண்பேடி அக்கோப்பை மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளார். இதன் மூலம் விவசாயிகளின் வயிற்றில் அடித்துள்ளனர். இதை எல்லாம் வன்மையாக கண்டிக்கிறோம். 135 ஆண்டுகள் பழமையான காங்கிரஸ் கட்சியை எவராலும் அழிக்க முடியாது. அழிக்க நினைப்பவர்கள் தான் அழிந்து போவர்.

தேசியத் தலைவர்களுக்கு பாதுகாப்பு அளிக்காத குஜராத் மாநில பாஜக அரசு உடனே பதவி விலக வேண்டும் என்றார் நமச்சிவாயம்.

அமைச்சர்கள் ஷாஜஹான், கந்தசாமி, எம்.எல்.ஏக்கள் அனந்தராமன், பாலன், தீப்பாய்ந்தான், விஜயவேணி,  தில்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார், நிர்வாகிகள் ஏகேடி ஆறுமுகம், தேவதாஸ், நீலகங்காதரன், விநாயகமூர்த்தி, பெத்தபெருமாள், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.