மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

நீட் தேர்விலிருந்து 3 ஆண்டுகள் விலக்குக் கோரப்பட்டுள்ளது

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு 3 ஆண்டுகளாவது விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருவதாக பள்ளிக் கல்வித் துறைஅமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:38 pm

DIN

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு 3 ஆண்டுகளாவது விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருவதாக பள்ளிக் கல்வித் துறைஅமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
சென்னை கீழ்ப்பாக்கம் சிஎஸ்ஐ எட்வர்ட் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆண்டு விழாவில் மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியது:
அனைவருக்கும் தரமான கல்வியை அளிக்க வேண்டும் உள்ளிட்ட நோக்கங்களைஅடிப்படையாகக் கொண்டு தமிழகப் பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறோம்.
நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் 3 ஆண்டுகளாவது விலக்களிக்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். எதிர்காலத்தில் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதை எந்தவித அச்சமும் இல்லாமல் எதிர்கொள்ள மாணவர்களுக்கு வாரந்தோறும் சனிக்கிழமைகளில் 3 மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும். இதற்காக சுமார் 10,000 ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்கத் திட்டமிட்டுள்ளோம்.
மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு குறைந்தபட்ச இட வசதி இல்லாத பள்ளிகளுக்கு அங்கீகாரம் 4 ஆண்டுகள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த இடைவெளியில் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்யத்தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்படும். 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அனைத்து வகுப்பறைகளும் கணினி மயமாக்கப்படும் என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.