அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

அதிமுக அணிகள் இணைப்பு குறித்து இன்று மாலை அறிவிப்பு: ஓ. பன்னீர்செல்வம்

அதிமுக அணிகள் இணைப்பு குறித்து இன்று மாலை அறிவிப்பு வெளியாகும் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:41 pm

DIN


சென்னை: அதிமுக அணிகள் இணைப்பு குறித்து இன்று மாலை அறிவிப்பு வெளியாகும் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

அணிகள் இணைப்பு குறித்து அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் இன்று மாலை ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்றும் அதன்பிறகு அறிவிப்பு வெளியாகும் என்றும், சென்னை க்ரீன்வேஸில் உள்ள தனது இல்லத்தில் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தார்.

அணிகள் இணைப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பன்னீர்செல்வம் இந்த பதிலை தெரிவித்தார்.

அதிமுக அணிகள் இணைப்புக்கு, ஓபிஎஸ் அணியினர் முன் வைத்த நிபந்தனைகளை எடப்பாடி பழனிசாமி அணியினர் ஏற்றுக்கொண்டிருக்கும் நிலையில் ஓபிஎஸ் அணியினரின் ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும், அவர் வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக அறிவிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை ஓபிஎஸ் அணியினர் முன் வைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.