அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

சிறையில் சசிகலாவை சந்தித்த அமைச்சர்கள்: சபாநாயகர் தனபாலுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்! 

பெங்களூரு சிறைக்கு சென்று சசிகலாவை சந்தித்த அமைச்சர்கள் மற்றும் அவர்களைக் கண்டிக்காத முதல்வரை தகுதி நீக்கம் செய்யக் கோரும் வழக்கில், சபாநாயகர் தனபாலுக்கு... 

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:42 pm

DIN

மதுரை: பெங்களூரு சிறைக்கு சென்று சசிகலாவை சந்தித்த அமைச்சர்கள் மற்றும் அவர்களைக் கண்டிக்காத முதல்வரை தகுதி நீக்கம் செய்யக் கோரும் வழக்கில், சபாநாயகர் தனபாலுக்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 வருட சிறைத்தண்டனை பெற்றுள்ள அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலா தற்பொழுது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறார். அவரை தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் காமராஜ் உள்ளிட்ட நால்வர் சிறையில் சென்று சந்தித்தனர். இது அரசியல் வட்டாரங்களில் கடும் சர்ச்சையை எழுப்பியது.

இதனைக் கண்டித்து மறைந்த அதிமுக எம்.எல்.ஏ தாமரைக்கனியின் மகன் ஆணழகன் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதில் அவர் சிறைக்கு சென்று சசிகலாவை சந்தித்த அமைச்சர்கள் நால்வர் மற்றும் அவர்களை கண்டிக்கத் தவறிய முதல்வர் பழனிசாமி ஆகியோரை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்று கோரியிருந்தார்  

இந்த வழக்கு தொடர்பாக சபாநாயகர் தனபாலுக்கு உயர் நீதிமன்றத் கிளை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அந்த நோட்டீஸினை சபாநாயகர் பெற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் இன்று மீண்டும் சபாநாயகர் தனபாலுக்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அந்த நோட்டீஸில் செப்டம்பர் 3-ஆம் தேதிக்குள் அவர் பதில் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.