குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

தனபாலை முதல்வராக்கினால் அதிமுக ஆட்சி நீடிக்கும்: திவாகரன்

தனபாலை முதல்வராக்கினால் அதிமுக ஆட்சி நீடிக்கும் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார்.

Published On :29 ஜனவரி 2024, 10:13 pm IST

தனபாலை முதல்வராக்கினால் அதிமுக ஆட்சி நீடிக்கும் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் திருவாரூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 
ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி இல்லாத அமைச்சரவை அமைய வேண்டும். அமைச்சரவையை கேட்டு நேற்று முடிவெடுத்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது. பொறுப்பு ஆளுநரை மத்திய அரசு வைத்திருப்பதால்தான் பல சித்து விளையாட்டுகள் நடக்கின்றன. 

மு.க. ஸ்டாலின் கொல்லைப்புறம் வழியாக ஆட்சியை பிடிக்க முயற்சிக்க மாட்டோம் என கூறியுள்ளார். அவர் தரம் தாழ்ந்த அரசியல் செய்யமாட்டார். இருப்பினும், திமுக நம்பிக்கையில்லா தீர்மானம்கொண்டு வரும் பட்சத்தில் பழனிசாமி ஆதரவு கேட்டால் ஆதரவு தருவோம். அதே நேரம் 4 ஆண்டுகளை இந்த அரசு பூர்த்தி செய்யுமா என்பதை உத்தரவாதமாக சொல்ல முடியாது.

சபாநாயகர் தனபாலை முதல்வராக்கினால் அதிமுக ஆட்சி நீடிக்கும் என்றார். மேலும் டிடிவி திகனரன் இல்லத்தில் மேலும் 8 எம்எல்ஏக்கள் இருப்பதாக அவர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.