சசிகலா குடும்பத்துக்கு இனி அதிமுகவில் இடமில்லை என்று ஆறுகுட்டி எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கோவையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சசிகலா குடும்பத்துக்கு இனி அதிமுகவில் இடமில்லை. அதிமுக பொதுக்குழுவை கூட்டும் போது யாருக்கு வலிமை எனத் தெரியவரும்.
இபிஎஸ், ஓபிஎஸ் பற்றி பேச நாஞ்சில் சம்பத்துக்கு என்ன தகுதி உள்ளது. அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசுவதற்கு ரூ 50 ஆயிரம் வாங்குபவர் நாஞ்சில் சம்பத்.
டிடிவி அணி எம்எல்ஏக்கள் ஆட்சிக்கு துரோகம் செய்தால் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.