மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதான பிடி வாரண்ட் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! 

விமான நிலையத்தில் செய்தியாளாரைத் தாக்கிய வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு ஆலந்தூர் நீதிமன்றம் பிறப்பித்து பிடிவாரண்ட்டை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

News image
Updated On :6 டிசம்பர் 2017, 10:24 am

DIN

சென்னை: விமான நிலையத்தில் செய்தியாளாரைத் தாக்கிய வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு ஆலந்தூர் நீதிமன்றம் பிறப்பித்து பிடிவாரண்ட்டை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

2013-ஆம் ஆண்டு சென்னை விமான நிலையத்தில் ரவீந்திரன் என்ற செய்தியாளாரைத் தாக்கியதாக தேமுதிக தலைவர் விஜயகாந்தத் மீது ஆலந்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

அந்த வழக்கில் ஆஜராகுமாறு விஜயகாந்துக்கு ஆலந்தூர் நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் நேரில் ஆஜராகவில்லை.

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு ஆலந்தூர் நீதிமன்றம் செவ்வாயன்று பிடி வாரண்ட் பிறப்பித்தது.

இதனை எதிர்த்து விஜயகாந்த் தரப்பில் புதன்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுள்ளதால் விஜயகாந்தால் நேரில் ஆஜராக முடியவில்லை என்று விளக்கமளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விஜயகாந்துக்கு ஆலந்தூர் நீதிமன்றம் பிறப்பித்து பிடிவாரண்ட்டை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்துடன் இந்த வழக்கானது எதிர்வரும் பிபரவரி 13-ஆம் தேதியன்று ஆலந்தூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் பொழுது விஜயகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் அவர் நாடு திரும்பும் பொழுது அவரை விமான நிலையத்தில் விமான நிலைய காவல் நிலைய அதிகாரிகள் கைது செய்ய தடை விதிப்பதாகவும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.