புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

நீதி வென்றது : அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா பேட்டி!

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என தண்டிக்கப்பட்டு இருப்பதன் மூலம்  நீதி நிலைநாட்டப்பட்டு உள்ளது என்று அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.

News image
Updated On :14 பிப்ரவரி 2017, 5:27 am

DIN

பெங்களூரு; சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என தண்டிக்கப்பட்டு இருப்பதன் மூலம்  நீதி நிலைநாட்டப்பட்டு உள்ளது என்று அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூன்று பேரும் குற்றவாளிகள் என்று உச்ச நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு தொடர்பாக பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் மற்றும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் ஆச்சார்யா தெரிவித்துள்ள கருத்துக்களாவது:

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என தண்டிக்கப்பட்டு இருப்பதன் மூலம்  நீதி நிலைநாட்டப்பட்டு உள்ளது.

நீதிபதி குமாரசாமி செய்த கணக்கு பிழைகளை உச்ச நீதிமன்றம் கணக்கில் கொண்டுள்ளது.

தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் மூலம் தண்டனைக்காலமான 4 ஆண்டுகளும், அதற்கு பிறகு 6 ஆண்டுகளும் சசிகலா தேர்தலில் போட்டியிட இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.  

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.