நீதி வென்றது : அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா பேட்டி!
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என தண்டிக்கப்பட்டு இருப்பதன் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டு உள்ளது என்று அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.


பெங்களூரு; சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என தண்டிக்கப்பட்டு இருப்பதன் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டு உள்ளது என்று அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூன்று பேரும் குற்றவாளிகள் என்று உச்ச நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு தொடர்பாக பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் மற்றும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் ஆச்சார்யா தெரிவித்துள்ள கருத்துக்களாவது:
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என தண்டிக்கப்பட்டு இருப்பதன் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டு உள்ளது.
நீதிபதி குமாரசாமி செய்த கணக்கு பிழைகளை உச்ச நீதிமன்றம் கணக்கில் கொண்டுள்ளது.
தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் மூலம் தண்டனைக்காலமான 4 ஆண்டுகளும், அதற்கு பிறகு 6 ஆண்டுகளும் சசிகலா தேர்தலில் போட்டியிட இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...