மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ஜல்லிக்கட்டு கலவர வழக்கு: பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் 2 வார அவகாசம்! 

ஜல்லிக்கட்டு தொடர்பாக மெரீனாவில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை மற்றும் இழப்பீடு கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு 2 வார அவகாசம் அளித்து ...

News image
Updated On :15 பிப்ரவரி 2017, 7:26 am

DIN

சென்னை: ஜல்லிக்கட்டு தொடர்பாக மெரீனாவில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை மற்றும் இழப்பீடு கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு 2 வார அவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டி சென்னை மெரினா கடற்கரையில் கடந்த மாதம் 18-ஆம் தொடங்கி ஆறுநாட்கள் தொடர் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தின் இறுதி நாளான ஜனவரி 23-ஆம் தேதியன்று  நிகழந்த கலவரத்தில் பலர் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டனர். மேலும் பொது சொத்துக்களும் சேதபடுத்தப்பட்டன.

இந்த கலவரம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் 9 வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த பொழுது இது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் 2 வார அவகாசம் அளித்து வழக்கை ஒத்தி வைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.