காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா சபதம்; எம்ஜிஆர் இல்லத்தில் தியானம்..!

பெங்களூரு நீதிமன்றத்தில் சரண் அடைவதற்காக செல்லும் வழியில் ஜெயலலிதா நினைவிடம் சென்ற சசிகலா அங்கே அவரது சமாதியில் கையால் அடித்து சபதம் ஏற்றார்.

News image
Updated On :15 பிப்ரவரி 2017, 10:05 am

DIN

சென்னை: பெங்களூரு நீதிமன்றத்தில் சரண் அடைவதற்காக செல்லும் வழியில் ஜெயலலிதா நினைவிடம் சென்ற சசிகலா அங்கே அவரது சமாதியில் கையால் அடித்து சபதம் ஏற்றார்.

ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர்மீதான சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவரும் குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அத்துடன் அவர் பெங்களூரு நீதிமன்ற 48-ஆம் எண் அறையில் ஆஜராக வேண்டும் என்று பதிவாளர் உத்தரவிட்டார்.

Story image

அதன் காரணமாக இன்று காலை போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து சசிகலா புறப்பட்டார்.அங்கிருந்து நேராக கடற்கரை சாலையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த சென்றார்.  

Story image

முதலில் சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தியவர் பின்னர் குனிந்து ஜெயலலிதாவின் சமாதியில் கையால் இருமுறை அடித்து சத்தியம் செய்தார். பின்னர் நிமிர்ந்து கை கூப்பி வாயில் முணுமுணுத்து பிரார்த்தித்தார். பின்னர் சமாதியை வலம் வந்து வணங்கினார். அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டார்.  

அவரது இந்த செயல் அங்கு கூடியிருந்த அதிமுக தொண்டர்களை உணர்ச்சி வசப்பட வைத்தது.

Story image

அதற்கு பிறகு அங்கிருந்து ராமாபுரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் இல்லத்திற்கு சென்ற சசிகலா அங்குள்ள எம்.ஜி.ஆர் படத்திற்கு முன்பு அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்தார். பின்னர் வெளியில் உள்ள அவரது சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.