அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏக்களிடம் போலீசார் விசாரணை: அதிரடிப்படை குவிப்பு!

அதிமுக எம்.எல்.ஏக்கள் கடத்தப்பட்டுள்ளதாக எழுந்த புகாரை அடுத்து சென்னையை அடுத்துள்ள கூவத்தூரில் உள்ள உல்லாச விடுதியில் தங்கியுள்ள அதிமுக எம்.எல்.ஏக்களிடம் ஐ.ஜி.செந்தாமரை கண்ணன் ...

News image
Updated On :15 பிப்ரவரி 2017, 2:56 pm IST

சென்னை: அதிமுக எம்.எல்.ஏக்கள் கடத்தப்பட்டுள்ளதாக எழுந்த புகாரை அடுத்து சென்னையை அடுத்துள்ள கூவத்தூரில் உள்ள உல்லாச விடுதியில் தங்கியுள்ள அதிமுக எம்.எல்.ஏக்களிடம் ஐ.ஜி.செந்தாமரை கண்ணன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூவத்தூரில் உள்ள உல்லாச விடுதியில் இருந்து தப்பி வந்து முதல்வர் பன்னீர்செல்வம் அணியில் இணைந்த  அதிமுகவை சேர்ந்த மதுரை கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ சரவணன் இன்று காலை தான் உட்பட அதிமுக எம்.எல்.ஏக்களை சசிகலா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி கடத்தி கூவத்தூரில் உள்ள உல்லாச விடுதியில் அடைத்து வைத்திருப்பதாக காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தார்.    

அதைத் தொடர்ந்து காவல்துறை ஐ.ஜி செந்தாமரை கண்ணன். காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முத்தரசி ஆகியோர் அடங்கிய போலீஸ் குழுவானது கூவத்தூர் உல்லாச விடுதியில் நுழைந்து விசாரணை நடத்தியது.

அவர்களுடன் ககாணிப்பாளர் விக்டர் மற்றும் மூன்று கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர்களும் விசாரணை குழுவில் இடம் பெற்றுள்ளனர்.  

இதனிடையே அங்கே இருக்கக் கூடிய எம்.எல்.ஏ க்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக அதிமுக துணை பொதுச் செயலாளர் தினகரன் அங்கு வந்துள்ளார். அங்குள்ள எம்.எல்.ஏ க்களுடன் போலீசார் தற்போது ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.     

இறுதியாக அங்கே உள்ள வெளியாட்கள் கூவத்தூரில் இருந்து வெளியேற்றப்படுகின்றன, மேலும் அதிரடிப்படை போலீசாரும் கணிசமான அளவில் அங்கு குவிக்கபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.