ஆந்திரப் பிரதேசத்தில் ஏற்பாடாகியிருந்த ஒரு கச்சேரிக்குப் போயிருந்தார் டைகர் வரதாச்சாரியார். இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவரின் வீட்டில்தான் கச்சேரிக்கு வந்த வித்வான்களுக்கு மதிய உணவு தயாராகியிருந்தது. நல்ல காரமான ஆந்திர வகை உணவு பரிமாறப்பட்டது. நல்ல உணவை ரசித்துச் சாப்பிடுபவர் டைகர். இருந்தாலும் அன்றைய சாப்பாட்டில் சற்றுத் "தூக்கலாக' இருந்த காரம் அவர் கண்ணில் நீரை வரவழைத்துவிட்டது! எல்லாரும் சாப்பிட்டுக் கை கழுவியதும், விருந்தோம்பல் செய்த ஆந்திரக்காரர், "எங்கள் வீட்டு சமையல் எப்படி?' என்று வினவினார். "எங்கள் ஊர் சமையலுக்கு நாக்கில் ஜலம் வரும். உங்கள் ஊர் சமையலுக்கு கண்ணில் ஜலம் வருகிறது!' என்றார் டைகர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







