சென்னை: தி.நகரில் உள்ள ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வீடு முன்பு கூடிய அதிமுக தொண்டர்களிடையே பேசிய அவர், உங்களுக்காக பணியாற்ற நான் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்து ஒரு மாதமான நிலையில், ஏராளமான அதிமுக தொண்டர்கள் தி.நகர் சிவஞானம் தெருவில் உள்ள தீபாவின் வீடு முன் குவிந்தனர்.
அவர்களை மாடியில் இருந்து பார்த்து வணக்கம் தெரிவித்த தீபா, வெற்றிச் சின்னமான இரட்டை விரலைக் காட்டினார். அதற்கு அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் கரகோஷம் எழுப்பினர்.
பிறகு, எனது அரசியல் பயணத்தை யாரும் தடுக்க முடியாது. திட்டமிட்டபடி அரசியலுக்கு வருவன். தொண்டர்கள் பொறுமை காக்க வேண்டும். விரைவில் உங்களுக்கு நான் நல்ல முடிவி அறிவிப்பேன். ஜெயலலிதா தொடங்கிய நல் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்களுக்காக பணியாற்ற நான் காத்திருக்கிறேன் என்று கூறினார்.
இதைக் கேட்ட தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பிறகு, அவர்களை பார்த்து கை கூப்பி வணக்கம் தெரிவித்து நன்றியை தெரிவித்துக் கொண்டார் தீபா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சபலென்காவை சாய்த்தாா் பாப்டிஸ்ட்

டிவிட்டா் முன்னாள் சிஇஓ தொடங்கிய ஏ.ஐ. நிறுவன மதிப்பு 200 கோடி டாலா்!

இன்று 6 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தொல்.திருமாவளவன் மீதான வழக்கு ரத்து
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


