மேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

உள்ளாட்சித் தேர்தல்: திமுக மேலும் ஒரு மனு : தேர்தல் ஆணையம், தமிழக அரசுக்கு நோட்டீஸ்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நீதிமன்றம் நிர்ணயிக்கும் காலவரம்புக்குள் நடத்தக் கோரி திமுக சார்பில் புதிதாக மனு

News image
Updated On :18 ஜூலை 2017, 7:48 pm

DIN

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நீதிமன்றம் நிர்ணயிக்கும் காலவரம்புக்குள் நடத்தக் கோரி திமுக சார்பில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவுக்கு நான்கு வார காலத்துக்குள் மாநில தேர்தல் ஆணையம், தமிழக அரசு உள்ளிட்டோர் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனு நீதிபதி எம்.துரைசாமி முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.வில்சன், உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையின் போது, ஜூலைக்குள் தேர்தலை நடத்தி விடுவதாக மாநிலத் தேர்தல் ஆணையம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
ஆனால், இதுவரை உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல், சிறப்பு அதிகாரிகளின் பதவிக் காலத்தை மட்டும் அவ்வப்போது அரசு நீட்டித்து வருகிறது. ஆகையால், நீதிமன்றம் நிர்ணயிக்கும் கால வரம்புக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட வேண்டும் என்றார்.
இதனையடுத்து, இந்த மனு தொடர்பாக நான்கு வாரத்தில் பதிலளிக்குமாறு தமிழக அரசு, மாநில தேர்தல் ஆணையம் உள்ளிட்ட எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நீதிபதி எம்.துரைசாமி ஒத்தி வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.