

சென்னை: முறையின்றி காவல் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள நீலநிற சுழல் விளக்குகளை அகற்ற வேண்டும் என்று டிஜிபிக்கு உள்துறை செயலர் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி, தமிழக காவல்துறை தலைவர் ராஜேந்திரனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
சென்னையில் சில காவல் வாகனங்களில் அனுமதியின்றி நீல நிற சுழல் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இது மத்திய அரசின் உத்தரவை மீறும் செயலாகும்.
எனவே உடனடியாக இந்த நீல நிற சுழல் விளக்குகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.