சேலம் கட்சராயன்பாளையம் ஏரியை பார்வையிட சென்ற மு.க.ஸ்டாலின் கைது
சேலம் செல்வதற்காக விமானம் மூலம் கோவை வந்தார் மு.க.ஸ்டாலின். பின்னர் எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட கச்சிராயன்பாளையம் ஏரியை


கோவை: சேலம் செல்வதற்காக விமானம் மூலம் கோவை வந்தார் மு.க.ஸ்டாலின். பின்னர் எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட கச்சிராயன்பாளையம் ஏரியை பார்வையிடுவதற்காக கேவை கணியூர் சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு ஸ்டாலினை போலீஸார் கைது செய்துள்ளனர். இதனால் அங்கு பதற்றம் நிலவி உள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலைகள் திமுக சார்பில் தூர்வாரப்பட்டு வருகின்றன. அதன்படி, சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த எருமப்பட்டி கச்சராயன்குட்டை ஏரி தூர்வாரப்பட்டது. இந்த ஏரியை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வியாழக்கிழமை நேரில் பார்வையிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த மு.க.ஸ்டாலின் அங்கிருந்து சாலை வழியாக காரில் கொங்கணாபுரத்துக்கு வந்துகொண்டிருந்த போது கோவை கணியூர் சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதி கட்சராயன்பாளையம் ஏரியை மு.க.ஸ்டாலின் பார்வையிடுவதன் மூலம் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சேலம் எஸ்.பி ராஜன் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...