'நீட்' தேர்வுக்காக திமுக நடத்தும் போராட்டம் தேவையற்றது
'நீட்' தேர்வுக்காக திமுக நடத்தும் போராட்டம் தேவையற்றது என மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரை தெரிவித்தார்.


'நீட்' தேர்வுக்காக திமுக நடத்தும் போராட்டம் தேவையற்றது என மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரை தெரிவித்தார்.
சென்னையிலிருந்து வியாழக்கிழமை மதுரை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:
கடந்த 2012-இல் மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்தபோது 'நீட்' தேர்வு கொண்டு வரப்பட்டது. அப்போது மு.க. அழகிரி உள்ளிட்ட திமுகவினர் மத்திய அரசில் அமைச்சர்களாக இருந்தனர். அப்போது 'நீட்' தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருந்துவிட்டு தற்போது எதிர்ப்பு தெரிவிப்பது சந்தர்ப்பவாதம்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாமுக்கு மணிமண்டபத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி வருகை தரும் நாளான்று, அதை திசைதிருப்பும் நோக்கத்தோடு திமுக இப்போராட்டத்தை நடத்துகிறது. இந்தப் போராட்டம் தேவையற்றது, கண்டனத்திற்குரியது என்றார் தம்பிதுரை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...