தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தமிழகத்தில் தற்போது நடப்பது பினாமி ஆட்சி அல்ல: வைத்திலிங்கம் எம்.பி. பேட்டி

தமிழகத்தில் தற்போது நடப்பது பினாமி ஆட்சி அல்ல. ஜெயலலிதாவின் ஆட்சி என்று அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த

News image
Updated On :4 ஜூன் 2017, 12:46 pm

DIN

தஞ்சாவூர்: தமிழகத்தில் தற்போது நடப்பது பினாமி ஆட்சி அல்ல, ஜெயலலிதாவின் ஆட்சி என்று அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஆர். வைத்திலிங்கம்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகேயுள்ள பருத்தியப்பர்கோவில் கிராமத்தில் இன்று நடைபெற்ற பல்நோக்கு திருமண மண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜை விழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

'அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதுதான் தொண்டர்களின் விருப்பம். எனவே, எந்த நிபந்தனையும் இன்றி வந்து இணையலாம். இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும். இரு அணிகளும் ஒற்றுமையுடன் இணைய வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் தற்போது நடப்பது பினாமி ஆட்சி அல்ல. ஜெயலலிதாவின் ஆட்சி. இந்த ஆட்சி தொடர்ந்து 4 ஆண்டுகள் செயல்படும். அதிமுக இன்னும் 100 ஆண்டுகள் இருக்கும். இதுதான் அதிமுகவின் ஒவ்வொரு தொண்டரின் விருப்பம் என்றார் வைத்திலிங்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.