நெய்வேலி: நெய்வேலி நியூ தெர்மல் பவர் திட்டப் பணியின் போது ரூபிங் சென்டர் முட்டு சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் காயமடைந்தனர்.
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் தனியார் நிறுவனத்தின் மூலம் நியூ தெர்மல் பவர் திட்டப் பணியின் மூலம் சாம்பல் வெளியேற்றும் நிலையம் 40X14 மீட்டர் அளவில் 10 மீட்டர் உயரத்தில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.
நேற்று இரவு 11 மணியளவில் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சுமார் 13 பேர் தரைத்தளத்தில் ஜல்லி போடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
பணி நிறைவுபெறும் நிலையில் இருந்தபோது இன்று அதிகாலை 6.30 மணியளவில் திடீரென ரூபிங் சென்டர் முட்டு சரிந்து விழுந்தது. இதில், சுமார் 15 அடி உயர்த்தில் பணியில் இருந்த 13 தொழிலாளர்கள் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர்.
காயமடைந்த வடமாநில தொழிலாளர்கள் 8 பேர் என்எல்சி பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் சிகிச்சை முடிந்து அவர்களின் வசிப்பிடத்திற்கு திரும்பி உள்ளனர்.
பலத்த காயமடைந்த தங்கமணி, பழனிசாமி, பிரமோத்குமார் உள்ளிட்ட 3 பேரும் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் ஒருவர் மட்டும் காயமின்றி அதிரிஷ்டவசமாக உயிர்தப்பினார்.