ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வைத்தீஸ்வரன் கோயிலில் ஸ்வாமி தரிசனம் செய்தார் நடிகர் சூர்யா

நாகை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோயிலில் திரைப்பட நடிகர் சூர்யா புதன்கிழமை வழிபாடு மேற்கொண்டார்.

News image
Updated On :15 ஜூன் 2017, 7:31 am

DIN

நாகை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோயிலில் திரைப்பட நடிகர் சூர்யா புதன்கிழமை வழிபாடு மேற்கொண்டார்.

சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் உள்ளது தையல்நாயகி உடனாய வைத்தியநாத சுவாமி கோயில். செவ்வாய் பரிகாரத் தலமான இக்கோயிலில், செல்வமுத்துக்குமாரசாமி, செவ்வாய் கிரக அங்காரக பகவான் ஆகியோர் தனி சன்னிதிக் கொண்டு காட்சியளிக்கின்றனர்.

இக்கோயிலுக்கு, திரைப்பட நடிகர் சூர்யா புதன்கிழமை காலை வந்தார். கோயில் சிவாச்சாரியார்கள் அவரை வரவேற்றனர். பின்னர், சித்தாமிர்த தீர்த்தக்குளத்தில் தீர்த்தம் எடுத்து வழிபட்ட அவர், கற்பகவிநாயகர் சன்னிதியில் வழிபாடு மேற்கொண்டார்.

இதைத் தொடர்ந்து, வைத்தியநாதசுவாமி சன்னிதி, தையல்நாயகி அம்பாள் சன்னிதி, செல்வமுத்துக்குமாரசாமி சன்னிதி, ஸ்ரீ அங்காரக பகவான் சன்னிதி ஆகிய சன்னிதிகளில் அர்ச்சனைகள் செய்து, வழிபாடு மேற்கொண்டார். கல்யாணம் சிவாச்சாரியார் பூஜைகளை நடத்தினார்.

பின்னர், வைத்தீஸ்வரன்கோயில் தேவஸ்தான அலுவலகத்துக்குச் சென்ற அவருக்கு, தேவஸ்தான கட்டளை விசாரணை திருநாவுக்கரசு தம்பிரான் பிரசாதம் அளித்து, ஆசி வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.