கோவை: கோவை ராஜவீதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் கத்தி முனையில் 4.5 கிலோ தங்க நகைகள் கொள்ளை அ டிக்கப்பட்டுள்ள சம்பவம பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ராஜவீதியில் அமைந்துள்ளது சிட்டி கோல்ட் என்னும் நகைக்கடை. அங்கே இன்று மாலை ஐந்து மணி அளவில் கொள்ளையர்கள் நால்வர் கத்தியுடன் உள்ளே நுழைந்தனர். கடையில் உள்ள பெண் ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டி அங்கிருந்த 4.5 கிலோ அளவிலான தங்க நகைகளை அவர்கள் கொள்ளை அடித்து சென்றனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் அந்த கடையின் வாகன ஓட்டுனரும் ஒருவர் என்று கூறப்படுகிறது.