சசிகலா தரப்புக்கு ஆட்டோ ரிக்ஷா; பன்னீர்செல்வத்துக்கு இரட்டை மின் விளக்கு?
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் சசிகலா தரப்புக்கு ஆட்டோ ரிக்ஷா சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


புது தில்லி: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் சசிகலா தரப்புக்கு ஆட்டோ ரிக்ஷா சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சசிகலா தரப்பினர் வலியுறுத்தியதைப் போலவே, அதிமுக அம்மா அணி என்ற பெயரே கட்சிக்கு வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருப்பதாகவும் தொலைக்காட்சி ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
அதே சமயம், ஓபிஎஸ் தரப்பில் இரட்டை மின் விளக்குடன் கூடிய கம்பம் சின்னம் ஒதுக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும், அதையே தேர்தல் ஆணையம் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன.
அம்மா அதிமுக என்ற பெயரை பன்னீர்செல்வம் தரப்பினர் வலியுறுத்தினர். ஆனால், அவர்களுக்கு புதிய பெயர் வழங்கப்பட்டிருப்பதாகவும், 'அதிமுக புரட்சித் தலைவி அம்மா' என்ற பெயரில் செயல்படுமாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...