தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சசிகலாவை திட்டி கடிதம் எழுதும் தமிழக மக்கள்: திக்குமுக்காடும் சிறை நிர்வாகம்

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள வி.கே. சசிகலாவுக்கு நாள்தோறும் ஏராளமான கடிதங்கள் வந்து குவிவதாக சிறை நிர்வாகம் கூறியுள்ளது.

News image
Updated On :24 மார்ச் 2017, 9:21 am

DIN

பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள வி.கே. சசிகலாவுக்கு நாள்தோறும் ஏராளமான கடிதங்கள் வந்து குவிவதாக சிறை நிர்வாகம் கூறியுள்ளது.

சசிகலாவுக்கு வந்த கடிதங்களில் ஏராளமானவை, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணம் என்று கூறி சசிகலாவை சபித்து எழுதப்பட்டிருப்பதாக பரப்பன அக்ரஹார மத்திய சிறை நிர்வாகம் கூறியுள்ளது.

பிப்ரவரி 15ம் தேதி சிறையில் சரணடைந்த நாள் முதல் தற்போது வரை 'சசிகலா, மத்திய சிறைச்சாலை, பரப்பன அக்ரஹாரா, பெங்களூர் - 560100' என்ற முகவரிக்கு சசிகலாவுக்கு நூறுக்கும் மேற்பட்ட கடிதங்கள் வந்து குவிந்திருப்பதாகவும், அதில் அதிகமான கடிதங்கள் அவரை குற்றம்சாட்டியும், சபித்தும் எழுதப்பட்டிருப்பதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக சிறைக் கைதிகளுக்கு வரும் அனைத்துக் கடிதங்களையும் சிறைத் துறை அதிகாரிகள் படித்துப் பார்த்த பிறகே, கைதிகளிடம் ஒப்படைப்பது வழக்கம். அதுபோலத்  தான் சசிகலாவுக்கு வரும் கடிதங்களையும் நாங்கள் படித்துப் பார்த்துக் கொடுக்கிறோம்.

கடிதங்களை இளவரசி படித்துப் பார்த்துவிட்டு மோசமாக இருக்கும் கடிதங்களை அவரே கிழித்துப் போட்டுவிடுவார். ஆரம்பத்தில் சசிகலா தனக்கு வரும் கடிதங்களை படித்து வந்தார். தற்போது படிப்பதை நிறுத்திவிட்டார் என்று சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் சேலம், தருமபுரி, மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி, விழுப்புரம் என பல்வேறு மாவட்டங்களில் இருந்த இந்த கடிதங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு சில கடிதங்கள்தான் சென்னையில் இருந்து வந்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.