மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

இந்தியாவின் மிகத் தூய்மையான நகரமாக இந்தூர் தேர்வு: திருச்சிக்கு 6-ஆவது இடம்

இந்தியாவின் மிகத் தூய்மையான நகரமாக இந்தூரை மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது.

News image
துப்புரவுக்கான 'ஸ்வச் சர்வக்ஷன்-2017' விருதை, திருச்சி மாநகராட்சி ஆணையர் என். ரவிச்சந்திரனிடம் (இடது ஓரம்) வழங்குகிறார் மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு.
Updated On :4 மே 2017, 7:29 pm

DIN

இந்தியாவின் மிகத் தூய்மையான நகரமாக இந்தூரை மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது.
இந்தியாவின் 434 நகரங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு, இந்த ஆண்டுக்கான மிகத் தூய்மையான நகரங்களின் பட்டியலை மத்திய அரசின் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை வெளியிட்டது.
அந்தப் பட்டியலின் முதலிடத்தை மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூர் பெற்றுள்ளது.
அதற்கு அடுத்தபடியாக, அதே மாநிலத்தைச் சேர்ந்த போபால் இரண்டாவது மிகத் தூய்மையான நகரம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
இந்தப் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து, மிக அசுத்தமான நகரம் என்ற பெயரை உத்தரப் பிரதேசத்தின் கோண்டா நகரம் பெற்றுள்ளது. அந்த நகருக்கு அடுத்தபடியாக மிக அசுத்தமான நகரம் என்ற பெயரை மகாராஷ்டிர மாநிலத்தின் புசாவல் நகரம் பெற்றுள்ளது.
அதிகபட்சமாக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 12 நகரங்கள், முதல் 50 இடங்களைப் பிடித்துள்ளன. கடைசி 50 இடங்களில், அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தின் 25 நகரங்கள் இடம் பெற்றுள்ளன. மிகத் தூய்மையான நகரங்கள் பட்டியலில் திருச்சி 6-ஆவது இடத்தையும், கோயம்புத்தூர் 16-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.
கர்நாடக மாநிலம், மைசூரு 5-ஆவது இடத்தையும், ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் 3-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. திருப்பதி 9-ஆவது இடத்தில் உள்ளது.
இந்தப் பட்டியலில் தமிழகத்தின் பல்வேறு நகரங்களும் இடம்பெற்றுள்ளன. அவை பின்வருமாறு:
மதுரை-57, தாம்பரம்-62, திருப்பூர்-68, ஒசூர்-82, வேளாங்கண்ணி-84, திண்டுக்கல்-106, வேலூர்-108, காரைக்குடி-110, புதுக்கோட்டை-113, ராஜபாளையும்-125, காஞ்சிபுரம்-127, சேலம்-135, பல்லாவரம்-155, ஆவடி-169, நாகர்கோவில்-174, நாகப்பட்டினம்-185, திருநெல்வேலி-193, தஞ்சாவூர், கடலூர்-250, ஆம்பூர்-267, ராமேஸ்வரம்-268 ஆகிய நகரங்கள் இடம்பிடித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.