ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மேலும் 2 நாள்களுக்கு அனல் காற்று வீசும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாள்களுக்கு அனல்காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறினார்.

News image
Updated On :17 மே 2017, 11:31 pm

DIN

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாள்களுக்கு அனல்காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறினார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது: ஆந்திரக்கடல் பகுதிகளிலிருந்து அதிகமான வெப்பக் காற்று வீசுவதால், வடதமிழகத்திலும், புதுச்சேரியிலும் அடுத்த இரண்டு நாள்களுக்கு அனல்காற்று வீசும். வெப்பச் சலனத்தின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையும். ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்யும்.
தமிழகத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் செவ்வாய்க்கிழமை 114 டிகிரி வெப்பம் பதிவானது. மேலும் தென்மேற்குப் பருவமழை தற்போதுதான் அந்தமான் பகுதிகளில் தொடங்கியுள்ளது. இந்த மாத இறுதியில் தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை குறித்த விவரங்கள் கண்காணிக்கப்பட்டு வெளியிடப்படும். வெப்பச் சலனத்தின் காரணமாக சென்னை நகர்ப் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றார்.
10 இடங்களில் சதம்: புதன்கிழமை நிலவரப்படி தமிழகத்தில் 10 இடங்களில் 100
டிகிரிக்கும் அதிகமான வெப்பம் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக திருத்தணியில் 111 டிகிரி வெப்பம் பதிவானது.
வெயில் நிலவரம் (ஃபாரன்ஹுட்டில்) :
திருத்தணி 111
வேலூர் 110
சென்னை 108
கடலூர், கரூர் பரமத்தி,
பாளையங்கோட்டை 107
திருச்சி 106
மதுரை 105
சேலம் 103
தருமபுரி 101
புதுவையில் 107 டிகிரி: புதன்கிழமை நிலவரப்படி புதுச்சேரியில் 107 டிகிரியும், காரைக்காலில் 104 டிகிரி வெயிலும் பதிவானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.