நிதி நிறுவனத்தில் ரூ.86 லட்சம் கையாடல்: கணக்காளர் கைது

கரூரில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.86.32 லட்சம் கையாடல் செய்த கணக்காளரை போலீஸார் கைது செய்தனர். மேலும், இதற்கு உடந்தையாக இருந்த பெண் உதவியாளரை போலீஸார் தேடி வருகின்றனர்.
Updated on
1 min read

கரூரில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.86.32 லட்சம் கையாடல் செய்த கணக்காளரை போலீஸார் கைது செய்தனர். மேலும், இதற்கு உடந்தையாக இருந்த பெண் உதவியாளரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கரூர் பசுபதிபாளையம் அருணாசல நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (59). இவர், கரூர் வடக்கு பிரதட்சணம் சாலையில் கரூர் பைனான்ஸ் மற்றும் சிட்பண்ட்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவரிடம் தெற்கு காந்திகிராமம், இந்திரா நகரைச் சேர்ந்த கே.தண்டபாணி (47), கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக கணக்காளராகவும், பசுபதிபாளையத்தைச் சேர்ந்த மாணிக்கம் மனைவி சுதா(38) உதவியாளராகவும் பணிப்புரிந்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த இரு நாள்களுக்கு முன் நிதி நிறுவனத்தின் வரவு -செலவு கணக்கை சரி பார்த்துள்ளனர். அப்போது, கடந்த 20.9.2012 முதல் தண்டபாணியும், சுதாவும் சேர்ந்து ரூ.86.32 லட்சம் கையாடல் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, ராஜேந்திரன் புதன்கிழமை இரவு இருவர் மீதும் கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து தண்டபாணியை கைது செய்தனர். தலைமறைவான சுதாவை தேடி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com