அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மீனவர்கள் மீதான தாக்குதல் துரதிஷ்டவசமானது

தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல் நடத்தியது துரதிஷ்டவசமானது என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

News image
Updated On :16 நவம்பர் 2017, 8:08 pm

DIN

தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல் நடத்தியது துரதிஷ்டவசமானது என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக பொன்.ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை காஞ்சிபுரம் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மீனவர்கள்மீது இந்திய கடற்படை தாக்குதல் நடத்தியது துரதிஷ்டவசமானது. எனினும், இந்திய கடற்படையினர்தான் சுட்டார்களா என்பது இதுவரை உறுதியாக்கப்படவில்லை. 
துப்பாக்கிச் சூடு குறித்து யார் புகார் கொடுத்தாலும் போலீஸார் வழக்குப் பதிய வேண்டும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆளும் அரசுக்கு ஆளுநர் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார். அத்துடன், மாநிலத்தின் நிலைமையை தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் செயல்படுகிறார். அதிகார வரம்புக்கு உள்பட்டு இருக்கும்போது, விமர்சனம் செய்வதற்கு உரிமை இல்லை. எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதற்காகவே இருப்பவர்கள். நிரந்தர ஆளுநர் இல்லை என்று தமிழகத்தில் கூறி வந்தனர். அதன்படி செயல்படக் கூடிய ஆளுநர் வந்திருக்கிறார். 
தமிழகத்தின் நிலைமைகளை ஆளுநர் தெரிந்து கொள்கிறார். மாநில அரசுக்கு ஆளுநர் பக்கத் துணையாக இருப்பதாகவே தமிழக அமைச்சர்களும் நினைக்கின்றனர். தவிர, ஆளுநர் எந்த வரம்பு மீறிச் செயல்படுகிறார் என்று யாரும் கூற முடியாது. ஆளுநர் அரசுக்கு ஆலோசனை வழங்கலாம். அதற்காக ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இதில் எந்தத் தவறும் இல்லை.
தேசிய பத்திரிகையாளர் தினத்தில் பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் நல்ல நட்புறவு உள்ளது என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.