கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

டாஸ்மாக்கில் மதுபானங்களின் விலை உயருகிறது: தமிழக அமைச்சரவை முடிவு! 

டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் விலையை உயர்த்துவது என தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

News image
Updated On :11 அக்டோபர் 2017, 7:53 am

DIN

சென்னை: டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் விலையை உயர்த்துவது என தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் விலையை உயர்த்துவது என தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

அதன்படி டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் பீர் வகை மதுபானங்களின் விலை பாட்டிலுக்கு ரூ.5 உயர்த்தப்படுகிறது.அதே போல 180 மி.லி அளவுள்ள குவார்ட்டர் வகை மதுபானங்களின் விலை பாட்டிலுக்கு ரூ.12 உயர்த்தப்படுகிறது.

அத்துடன் டாஸ்மாக்கில் மது விற்பனைக்கு என ரூ. 5,212 கோடியை இலக்காக நிர்ணயம் செய்வது என்றும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.