கடந்த ஆண்டினை விட தீபாவளி நாளில் வருமானம் 20% குறைவு: டாஸ்மாக் நிர்வாகம் கவலை!
கடந்த ஆண்டினை விட இவ்வாண்டு தீபாவளி நாளில் மது விற்பனை வருமானம் 20% குறைவு என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


சென்னை: கடந்த ஆண்டினை விட இவ்வாண்டு தீபாவளி நாளில் மது விற்பனை வருமானம் 20% குறைவு என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வருடா வருடம் தீபாவளி நாளில் மது விற்பனை செய்வதில் தமிழக அரசு சந்தைப்படுத்தல் ஆணையமான டாஸ்மாக் நிறுவனம் இலக்கு நிர்ணயம் செய்து செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கூட மது விற்பனைக்கு என ரூ.500 கோடி இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் டாஸ்மாக் நிறுவனம் இன்று காலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இம்முறை தீபாவளி நாளான நேற்று தமிழகம் முழுவதும் உள்ள சில்லறை மது விற்பனை நிலையங்களில் ரூ.135 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது. இது கடந்த ஆண்டு தீபாவளி நாள் மது விற்பனை வருமான அளவை விட 20% குறைவாகும்.
மதுபானங்களின் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டதற்கு பிறகு இந்த விற்பனை சரிவு நிகழ்ந்துள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...