அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

"அம்மா' திட்ட முகாமுக்கு வந்த விவசாயி மயங்கி விழுந்து சாவு

மேட்டுப்பாளையம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற "அம்மா' திட்ட முகாமுக்கு வந்த விவசாயி மயங்கி விழுந்து இறந்தார்.

News image
'அம்மா' திட்ட முகாமில் மயங்கி விழுந்த விவசாயி சடகோபன்.
Updated On :20 அக்டோபர் 2017, 9:05 pm

DIN

மேட்டுப்பாளையம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற "அம்மா' திட்ட முகாமுக்கு வந்த விவசாயி மயங்கி விழுந்து இறந்தார்.
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், மேட்டுப்பாளையத்தில் மக்களைத் தேடி வருவாய்த் துறை எனும் "அம்மா' திட்ட முகாம் அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சின்னப்பா தலைமை வகித்தார். முகாமில் ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ கே.பழனி கலந்து கொண்டு, அங்கன்வாடி மைய வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். 
அப்போது மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி சடகோபன், மாத்தூர் அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயக் கடன்கள் வழங்குவதில்லை. இதனால் விவசாயிகள் அவதிப்பட்டு வருவதாகக் கூறி எம்எல்ஏ பழனியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது மயங்கி விழுந்தார். 
இதையடுத்து முகாமில் இருந்த பண்ருட்டி அரசு ஆரம்ப சுகாதார மருத்துவரான செலின் வித்யா விவசாயி சடகோபனை பரிசோதனை செய்தார். சடகோபனுக்கு நாடித் துடிப்பு மிகவும் குறைவாக உள்ளதாகவும் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படியும் கூறினார். 
உடனடியாக அவரை மாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சடகோபன் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் மேட்டுப்பாளையம் பகுதி பொதுமக்கள் சோகம் அடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.