ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

சசிகலா மீது மற்றொரு தமிழக அமைச்சரும் பரபரப்புப் புகார்

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலர் வி.கே. சசிகலா மீது தமிழக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளார்.

News image
Updated On :16 செப்டம்பர் 2017, 6:01 am

DIN


திருச்சி: சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலர் வி.கே. சசிகலா மீது தமிழக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளார்.

திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்கு சசிகலாவும், தினகரனும் காரணம் என்று கூறினார்.

மேலும், டிடிவி தினகரன் வெகு விரைவில் சிறைக்கு செல்லும் காலம் வரப்போகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே, தமிழக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வி.கே. சசிகலா மீது புகார் கூறியுள்ள நிலையில் மற்றொரு அமைச்சரும் புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.