அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மழையை எதிர்பார்க்கலாம்.
கடந்த 24 மணிநேரத்தில் தேவாலா பகுதியில் 4 செ.மீ., மழையும், திருப்புவனத்தில் 3 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.