சபாநாயகரின் உத்தரவில் யாரும் தலையிட முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தில்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
எடப்பாடி தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க மு.க. ஸ்டாலினும், தினகரனும் கூட்டு சதியில் ஈடுபட்டுள்ளனர். 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் முடிவு குறித்து கருத்து தெரிவிக்க இயலாது. ஜனநாயக முறைப்படி சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளதால், அதில் யாரும் தலையிட முடியாது.
தமிழக வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக மத்திய அரசுடன் பேச தில்லிக்கு வந்துள்ளோம். இன்றைக்கு தேர்தல் ஆணையர்களை சந்திக்கும் திட்டம் ஏதும் இல்லை. கட்சியில் எந்தவித குழப்பமும் இல்லை, ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் இன்று உத்தரவு பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் எம்.பி.க்கள் பங்கேற்க வேண்டும்: காங்கிரஸ்
நடிகருடன் திருமணம்... தயாரிப்பாளர் பேச்சால் வெட்கப்பட்ட மிருணாள்!

உடல்நிலை குறித்து விடியோ வெளியிட்ட வானதி சீனிவாசன்!

ஈரானுக்கு ஆயுதம் வழங்கியதாக வரும் செய்திகள் ஆதாரமற்றவை: சீனா
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


