தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

மதுரை வைகை ஆற்றில் கலக்கும் கழிவுநீர்: மாநகராட்சி ஆணையரின் அதிர்ச்சி அறிக்கை!

மதுரை வைகை ஆற்றில் நேரடியாகக் கலக்கும் கட்டிடங்களின் கழிவுநீர் பற்றிய மாநகராட்சி ஆணையரின் அதிர்ச்சி அறிக்கை, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :18 செப்டம்பர் 2017, 11:28 am

மதுரை: மதுரை வைகை ஆற்றில் நேரடியாகக் கலக்கும் கட்டிடங்களின் கழிவுநீர் பற்றிய மாநகராட்சி ஆணையரின் அதிர்ச்சி அறிக்கை, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை வைகை ஆற்றில் பல கட்டிடங்கள் வெளிவிடும் கழிவு நீர் நேரிடையாக கலப்பதாகவும், எனவே இதனைக் குறித்து விரிவாக ஆய்வு செய்ய உத்தரவிடுமாறும் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செயயப்பட்டது.

இந்த மனு இன்று விசாரைணக்கு வந்த பொழுது மதுரை மாநகராட்சி ஆணையர் அனீஸ் சங்கர் அறிக்கை ஒன்றை நீதிமன்றதில் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:

மதுரை வைகை ஆற்றில் 363 கட்டிடங்களின் கழிவுநீர்  நேரடியாகக் கலக்கிறது. இந்த கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. விதிகளை மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.