அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தமிழகம் முழுவதும் சிறப்பு காவல் படையினர் தயார் நிலையில் இருக்க டிஜிபி 'திடீர்' உத்தரவு

தமிழகம் முழுவதும் சிறப்பு காவல் படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் 'திடீர்' உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News image
Updated On :26 செப்டம்பர் 2017, 10:15 am

DIN

சென்னை: தமிழகம் முழுவதும் சிறப்பு காவல் படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் 'திடீர்' உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக டிஜிபி  அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விதமான சிறப்புக் காவல் படைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று இதன் மூலம் அறிவுறுத்தபப்டுகிறது. குறிப்பாக 19 மாவட்டங்களில் உள்ள சிறப்புக் காவல் படைகள் உச்ச பட்ச தயார் நிலையில் இருக்க வேண்டும். இந்த தகவலானது மாநகர காவல்துறை ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் வழி அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு டிஜிபி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக அசாதாரணமான சூழ்நிலைகளில்தான் இத்தகைய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்பதால் காவல்துறை வட்டாரங்களில் பதற்றமான சூழல் நிலவுகிறது. 

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 சட்டப்பேரவை உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி, திமுக கொறடா சக்கரபாணி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளதால், அசம்பாவிதங்களை எதிர்கொள்ளும் வகையில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை இருக்கலாம்  என்று எதிர்பார்க்கப்படுகிறது 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.